ராஞ்சியில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை
ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஞ்சி : ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் கரோனாவல் பாதிக்கப்பட்டு கர்வா மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான ஆண் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை கரோனா சிறப்பு வார்டு முன்பு படிகட்டுக்கு அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராஞ்சி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.