தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகரில் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரம்

ANI

ஸ்ரீநகர் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரின் புறநகரான நர்பால் சோதனைச் சாவடியில் காவல்துறை திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை காவல்துறையினர் நிறுத்த முயன்றனர், ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதால் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு காரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீநகர் மேற்கு காவல் கண்காணிப்பாளர் ஷாஜாத் சலாஹி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பயங்கரவாத நடவடிக்கையை கண்காணிக்கும் அடிப்படையில் தடுப்பு வைத்து சோதனை செய்து வந்தோம். இவ்வழியே வந்த காரை நிறுத்த முயன்றபோது, அந்த கார் நிற்காமல் சென்றது.

இதைத்தொடர்ந்து, இப்பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT