முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தின் பாபா குண்ட் கலீல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ஜாகீர் அப்பாஸ் லோன் என்ற தீவிரவாதியின் அடிவயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

முழு கட்டுரையைப் படிக்க →