தற்போதைய செய்திகள்

கரோனா: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் பலி

DIN

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் 4 பேர் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில், கடந்த ஜூன் 7 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரும் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT