ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதியதாக 949 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சுவிட்சர்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,714 ஆக உயர்த்தியுள்ளது என்று சுவிஸ் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103-ல் இருந்து 161 ஆக உயர்ந்துள்ளது என்றும் இதுவரை 91,400 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 14 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.