எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூடிய மக்களவைக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார்.