முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் குறித்து கருத்து: பாக்., முன்னாள் அமைச்சருக்கு கேஜரிவால் பதில்!

இந்திய மக்களவைத் தேர்தல் குறித்து, கருத்துக் கூறிய பாக்., முன்னாள் அமைச்சர் ஃபவாத் உசேனுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதிலளித்துள்ளார்.

Updated On : 25 மே, 2024 at 9:33 AM
பகிர்:

பாக்., முன்னாள் அமைச்சர் ஃபவாத் உசேன், தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்திருந்த புகைப்படத்தினைப் பகிர்ந்து, ”வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை அமைதி மற்றும் நல்லிணக்கம் தோற்கடிக்கட்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பாக்., முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அரவிந்த் கேஜரிவால் ”நானும் எனது நாட்டுமக்களும் எங்களின் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள். பாகிஸ்தானில்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், ”இந்தியாவில் தேர்தல் என்பது எங்களது உள்விவகாரம். பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது” என்றும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →