FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது!

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

Updated On : 25 ஆகஸ்ட் 2024, 9:28 am IST
டெலிகிராம் (கோப்புப்படம்) - DIN
பகிர்:

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

குற்றச் செயல்களை டெலிகிராம் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாகப் பதிவான வழக்கில் பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பிரான்ஸ் விமான நிலையத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பாவெல் துரோவ், ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

39 வயதான துரோவ், பணமோசடி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆபாசப் பதிவுகளை பகிர்வதற்கு டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு ஆதரவாக இருந்த குற்றத்திற்காக பிரான்ஸ் அரசு கைது உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு தனி விமானம் மூலம் சென்றுக்கொண்டிருந்தபோது, பொர்காட் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments