தில்லி வந்தடைந்தார் துபை முடி இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் ANI
தற்போதைய செய்திகள்

தில்லியில் துபை இளவரசர்!

துபை இளவரசர் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளதைப் பற்றி...

DIN

துபை நாட்டு முடி இளவரசர் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

துபையின் முடி இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஏப்.8) இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று முடி இளவரசராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியா வந்த அவரை இன்று தில்லி விமான நிலையத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சருமாக பதவி வகிக்கும் இளவரசர் ஹம்தான் இந்த இரண்டு நாள் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து கலந்து ஆலோசிக்கவுள்ளார்.

இந்நிலையில், இளவரசர் ஹம்தானுடன் ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு தொழிலதிபர்கள் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் மதிய உணவு விருந்தில் அவர் இன்று (ஏப்.8) கலந்துக்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் தில்லியிலிருந்து மும்பை செல்லும் இளவரசர் ஹம்தான் அங்கு இந்தியா மற்றும் துபையைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியின் முடி இளவரசர் காலித் பின் முஹம்மது பின் ஜயத் அல் நஹ்யான் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் தற்போது இளவரசர் ஹம்தானின் பயணமானது இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், துபை இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதி தளமாகவும் பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி பண்டிகை: 6,630 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தைச் சோ்ந்த ரங்கநாதனுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஒத்திவைக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பணியாளா் நியமன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சா் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

பருவமழைக்கு முன்பு வெள்ளத் தணிப்புப் பணிகள்: அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT