அழகே அழகு

முகத்தில் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் மறைய எளிய டிப்ஸ்!

தினமணி

கோடை வெயில் காரணமாகவும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் முகத்தில் அழுக்குகள் தேங்குவதால் கரும்புள்ளிகள், கருமையான திட்டுகள் தோன்றும். 

குறிப்பாக மூக்கின் இடுக்குகளில் வாயைச் சுற்றி காணப்படும் கருமையை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பயன்படுத்தலாம். 

இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடலைமாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகிய இரண்டையும் நன்றாகக் கலந்து அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவும். இதன்பின்னர் 2 டேபிள் ஸ்பூன் அல்லது தேவையான அளவுக்கு காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். 

இப்போது இதனை முகத்தில் கருமை உள்ள பகுதிகளில் அல்லது முகம் முழுவதுமே பேக் போடவும். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை தேய்த்து கழுவவும். இவ்வாறு செய்துவர இரு நாள்களிலேயே நீங்கள் மாற்றத்தை உணர முடியும். கருமைப் பகுதி மறைவதுடன் முகம் பொலிவு பெறும். 

பால் மற்றும் தேன் கலந்த கலவையைக் கொண்டு முகத்தில் கருமைப் பகுதிகளை மசாஜ் செய்வதும் சிறந்த பலனைத் தரும். இதுதவிர வெறுமனே ரோஸ் வாட்டர் கொண்டும் மசாஜ் செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT