கோப்புப்படம் 
அழகே அழகு

முகத்தில் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் மறைய எளிய டிப்ஸ்!

கோடை வெயில் காரணமாகவும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் முகத்தில் அழுக்குகள் தேங்குவதால் கரும்புள்ளிகள், கருமையான திட்டுகள் தோன்றும். 

தினமணி

கோடை வெயில் காரணமாகவும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் முகத்தில் அழுக்குகள் தேங்குவதால் கரும்புள்ளிகள், கருமையான திட்டுகள் தோன்றும். 

குறிப்பாக மூக்கின் இடுக்குகளில் வாயைச் சுற்றி காணப்படும் கருமையை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பயன்படுத்தலாம். 

இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடலைமாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகிய இரண்டையும் நன்றாகக் கலந்து அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவும். இதன்பின்னர் 2 டேபிள் ஸ்பூன் அல்லது தேவையான அளவுக்கு காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். 

இப்போது இதனை முகத்தில் கருமை உள்ள பகுதிகளில் அல்லது முகம் முழுவதுமே பேக் போடவும். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை தேய்த்து கழுவவும். இவ்வாறு செய்துவர இரு நாள்களிலேயே நீங்கள் மாற்றத்தை உணர முடியும். கருமைப் பகுதி மறைவதுடன் முகம் பொலிவு பெறும். 

பால் மற்றும் தேன் கலந்த கலவையைக் கொண்டு முகத்தில் கருமைப் பகுதிகளை மசாஜ் செய்வதும் சிறந்த பலனைத் தரும். இதுதவிர வெறுமனே ரோஸ் வாட்டர் கொண்டும் மசாஜ் செய்யலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT