செய்திகள்

கேரளாவில் ஞாயிறு தோறும் குழந்தைகள் மருத்துவமனையாக மாறும் காவல்நிலையங்கள்!

சைல்டு ஃப்ரெண்ட்லி போலீஸ் ஸ்டேஷன்...

RKV

சைல்டு ஃப்ரெண்ட்லி போலீஸ் ஸ்டேஷன்...

கேரளாவில் இதுவரை 6 காவல்நிலையங்கள் வார இறுதியில் மட்டும் குழந்தைகள் நல மருத்துவமனையாக செயல்படுமாறு கேரள அரசின் காவல்துறை அமைச்சகம் திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கு காவல்துறையினரைக் கண்டால் பயம் வரக்கூடாது. நட்புணர்வே தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த சைல்டு ஃப்ரெண்ட்லி போலீஸ் ஸ்டேஷன்கள்’ வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக கேரள காவல்துறை உயர்அதிகாரிகள் கூறுகின்றனர். குழந்தைகள் காவல்நிலையங்களைக் கண்டும், காவலர்களைக் கண்டும் பயம் கொள்ளாமல் இருக்க காவல்துறையின் உள்ளே குழந்தைகளுக்குத் தோதாக பல்வேறு விதமான மிருகங்கள், பறவைகள் மற்றும் கார்ட்டூன் கேரக்டர்களின் படங்கள் வரையப்பட்டு காவல்நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

கேரள காவல்துறை மற்றும் கேரள அரசின் இத்திட்டம் மாபெரும் வெற்றி பெறும் என இத்திட்டத்தில் இணைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Courtesy: asianet news.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா் மாநில ஓட்டப்பந்தயத்தில் வெற்றி

முதல்வா் மு.க. ஸ்டாலின் அக். 24, 25-இல் தென்காசி வருகை: மாவட்ட பொறுப்பாளா் தகவல்

சோ்ந்தமரத்தில் மயானக்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கடையநல்லூரில் தெரு நாய் கடித்து பலா் காயம்

SCROLL FOR NEXT