விளையாட்டு

ஒருநாள் போட்டி: ஷ்ரேயஸ் ஐயர் 1000 ரன்களை கடந்தார் 

DIN

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர்  25 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். 

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய (ஜூலை 22) முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 308 ரன்களை அடித்து பிறகு 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் ஷ்ரேயஸ் ஐயர்  54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் இவர் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார். 

இதற்குமுன் 1000 ரன்களை 24 இன்னிங்ஸில் விராட் கோலி, ஷிகர் தவான் கடந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து நவஜோத் சிங் சித்து மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் 25 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்த இந்திய வீரர்களாக உள்ளனர்.

28 ஒருநாள் போட்டிகளில் 25 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 1001 ரன்களை எடுத்துள்ள ஷ்ரேயஸ் ஐயரின் சராசரி 41.70 ஆகும். இதில் 1 சதம், 10 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 103. 

இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT