FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சிறிது காலம் விளையாடுவேன்: ரோஹித் சர்மா

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சில காலத்துக்கு விளையாடுவேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஜூலை 2024, 6:44 pm IST
ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ (எக்ஸ்)
பகிர்:

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சில காலத்துக்கு விளையாடுவேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பையை வென்ற பிறகு அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் அணியில் இல்லாத நிலையிலும், இந்திய அணி டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இம்மாத இறுதியில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சில காலத்துக்கு விளையாடுவேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நான் எதிர்காலம் குறித்து அதிகம் யோசிக்கவில்லை. இன்னும் சில காலத்துக்கு நான் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கு இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துவார் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments