FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

அவசரமாக இந்தியாவுக்கு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளார்.

Updated On : 26 நவம்பர் 2024, 7:31 pm IST
கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)
பகிர்:

தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது.

தாயகம் திரும்பிய கௌதம் கம்பீர்

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள கௌதம் கம்பீர், தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரது குடும்பத்தினருடன் இன்று (நவம்பர் 26) அதிகாலை இந்தியா திரும்பினார். தனிப்பட்ட தவிர்க்க இயலாத அவசர காரணங்களினால் அவர் தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் அணியுடன் மீண்டும் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 முதல் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments