கௌதம் கம்பீர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

அவசரமாக இந்தியாவுக்கு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளார்.

DIN

தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது.

தாயகம் திரும்பிய கௌதம் கம்பீர்

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள கௌதம் கம்பீர், தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரது குடும்பத்தினருடன் இன்று (நவம்பர் 26) அதிகாலை இந்தியா திரும்பினார். தனிப்பட்ட தவிர்க்க இயலாத அவசர காரணங்களினால் அவர் தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் அணியுடன் மீண்டும் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 முதல் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

SCROLL FOR NEXT