ரோஹித் சர்மா படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (ஆகஸ்ட் 2) இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் 66 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்திய அணி 330 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

ஓவலில் ரோஹித் சர்மா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியைக் காண டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நேரில் வந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசிப் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளிக்கும் புகைப்படங்களை பிசிசிஐ அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma is watching the final Test match between India and England in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT