கிரிக்கெட்

பாகிஸ்தான் - வங்கதேச போட்டி: டாஸ் சுண்டுவதில் தாமதம்! வெல்லும் முனைப்பில் மழை!

பாகிஸ்தான் - வங்கதேச போட்டி: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்..

DIN

பாகிஸ்தான் - வங்கதேச போட்டிக்கான ராவல்பிண்டி மைதானத்தில் மழை பெய்துவருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப்-பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறிவிட்ட நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கின்றன.

இதையும் படிக்க: ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!

இந்த நிலையில், அரையிறுதியில் இருந்து வெளியேறிவிட்ட பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதும் இந்தத் தொடரின் 9-வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டாலும், 3-வது இடத்தைப் பிடிப்பதில் போட்டி நிலவுகிறது. எவ்வாறாயினும், மைதானத்தைச் சுற்றிலும் மேகங்கள் சூழ்ந்து இருப்பதாலும் இந்தப் போட்டி 88 சதவீதம் மழையால் பாதிக்கப்படவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து அளிக்கப்படும்.

இதையும் படிக்க: கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT