ஷேன் வாட்சன் (கோப்புப்படம்) படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஷேன் வாட்சன்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பதவிக்காலம் முடியும் முன்பு விலகியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பதவிக்காலம் முடியும் முன்பு விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். தற்போது, அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு மீதமிருக்கும் நிலையில் அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

பயிற்சியாளர் பதவியிலிருந்து ஷேன் வாட்சன் விலகியதை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் நதீம் ஓமர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் 10-வது சீசனில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஷேன் வாட்சன் விலகுகிறார். அவரது எதிர்கால பயணத்துக்கு எங்களது வாழ்த்துகள் என்றார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மற்றும் பாகிஸ்தான் தேசிய அணியிலிருந்து பயிற்சியாளர்கள் அவர்களது பதவிக்காலம் முடிவடையும் முன்பு விலகுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கிறது.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி நிர்வாகத்துக்கும், அந்த அணியின் பயிற்சியாளர் ஷேன் வாட்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஷேன் வாட்சன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கேரி கிரிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி அவர்களது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பதவிக்காலம் முடியும் முன்பே விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்டிக்கடையில் மதுவிற்ற தாய், மகன் கைது

வாப்ஸோ மாநில செஸ் போட்டி: ஃபெமில், தியா, ஷண்மதி முதலிடம்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் சட்டத்தில் கைது

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயில் 1,300 படிகளில் யோகாசனம் செய்து சிறுமி சாதனை

மல்லசமுத்திரத்தில் இருதரப்பினா் கைகலப்பு: 11 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT