சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதை டி20 தொடர் பாதிக்காது: ஜோஸ் பட்லர்
டி20 போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதைப் பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதைப் பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியில் இரண்டு அணிகளின் வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்
Advertisement
Advertisement
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாதிக்காது
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டி20 போட்டிகள், இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் மிகப் பெரிய தொடராக இருக்கப் போகிறது. சொந்த மண்ணில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்படும். அவர்களுக்கு எதிரான இந்த தொடரை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன். போட்டி அட்டவணைகள் குறித்து பெரிதாக கவலையில்லை. இந்த டி20 தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கப் போகிறது என நினைக்கிறேன்.
இந்திய அணிக்கு எதிராக சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளோம். அந்த போட்டிகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிக அளவிலான டி20 போட்டிகளில் விளையாடுவது, இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என்றார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரண்டன் மெக்கல்லம், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை தொடங்குகிறார்.
அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், ஒருநாள் வடிவிலான போட்டிகளாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.