நிதீஷ் குமார் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.  படம்: ஏபி
கிரிக்கெட்

வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து... 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!

லார்ட்ஸ் டெஸ்ட்டின் கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரையில் நடந்தது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 367 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4-ஆம் நாள் முடிவில் 58 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது.

இந்நிலையில், ஐந்தாம் நாளில் தொடக்கத்திலேயே இந்திய அணி ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டினை இழந்தது.

அதற்கடுத்து, ஜடேஜா - நிதீஷ் குமார் அதிகமான பந்துகளை எதிர்கொண்டார்கள். இங்கிலாந்து வீரர்கள் நிதீஷ் குமாரிடம் அதிகமாக பேசிப் பேசி அவரை தவறிழைக்க வைக்க முயன்றார்கள்.

இந்திய அணியின் 7-ஆவது விக்கெட் விழுந்து 14 ஓவர்களுக்குப் பிறகுதான் 8-ஆவது விக்கெட்டாக நிதீஷ் ஆட்டமிழந்தார்.

தற்போது, மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. 39.3 ஓவர்களில் இந்திய அணி 112/8 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா வெற்றி பெற 81 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து இருக்கிறது.

ஜடேஜா வெற்றியைப் பெற்றுத் தருவாரா என இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

The Indian team is struggling in the third Test against England, having lost 8 wickets till lunch.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

நீல மின்மினி... ருக்மணி வசந்த்!

அடுத்தடுத்து பெரிய படங்கள்! பான் இந்திய ஸ்டாராகும் ருக்மணி வசந்த்!

கவலைப்பட வேண்டாம்; ஆசிரியர்களை அரசு கைவிடாது: அன்பில் மகேஸ்

பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

SCROLL FOR NEXT