ஷ்ரேயாஸ் ஐயர்.. 
கிரிக்கெட்

2025 ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணி வெல்லும்.! -ஷ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் அணி ஐபிஎல் கோப்பை வெல்லும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

DIN

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கோப்பை வெல்லும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. மார்ச் 25 ஆம் தேதி நடைபெறும் லீக் சுற்றின் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி கில் தலைமையிலான குஜராத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

கடந்தாண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று தந்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். இதனால், மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ரூ.26.75 கோடிக்கு எடுத்து புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

இதையும் படிக்க: சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர்கள் ஏமாற்றம்

2024-25 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி உள்பட 5 கோப்பைகளை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணிக்கான வென்று புதிய வரலாறு படைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “என்னை ஏலத்தில் எடுத்தபோது பஞ்சாப் அணி இதுவரை கோப்பையை வென்றிருக்கவில்லை. அந்த அணிக்கு கோப்பையை வென்று தர வேண்டும் என நினைத்தேன். அது ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்கும். தொடரின் இறுதியில் பஞ்சாபி கொண்டாட்டங்கள் களைகட்டும்.

2008 ஆம் ஆண்டு மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பால் பாய்-ஆக இருந்தேன். அதன்பின்னர், மும்பை 14 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் விளையாடினேன். அப்போது ஐபிஎல்லில் விளையாடிய பதான், ராஸ் டெய்லர், யுவராஜ் சிங்கின் ஆட்டங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றன. பால் பாய்யாக இருந்து தற்போது கேப்டனாக உயர்ந்துள்ளேன்” என்றார்.

இதையும் படிக்க: முதல் போட்டியைத் தவறவிடும் ஹார்திக்... மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT