முகப்பு
கிரிக்கெட்

பேட்டர்களை விட அதிக பந்துகள் விளையாடிய குல்தீப் யாதவ்..! என்ன நடக்கிறது?

பேட்டர்களை விட சிறப்பாக பேட்டிங் விளையாடிய பந்துவீச்சாளர் குல்தீப் குறித்து...

Updated On : 24 நவம்பர், 2025 at 9:39 AM
பந்தினை டிஃபென்ஸ் ஆடும் குல்தீப் யாதவ்.
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் 100 பந்துகளைக் கடந்து விளையாடியுள்ளார்.

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களை விட அதிகமான பந்துகளை குல்தீப் யாதவ் விளையாடுவது பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 194/9 ரன்கள் எடுத்துள்ளது.

சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 134 பந்துகள் விளையாடி 19 ரன்கள் எடுத்தார்.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 97 பந்துகள் விளையாடியதே இரண்டாவது அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Kuldeep Yadav has played over 100 balls in the second Test against South Africa.

முழு கட்டுரையைப் படிக்க →