முகப்பு
கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் சாம்பியன்

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் வென்று அசத்தியுள்ளது.

Updated On : 29 நவம்பர், 2025 at 4:34 PM
பகிர்:

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் வென்று அசத்தியுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 29) ராவல்பிண்டியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷாராவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

சிறப்பாக விளையாடிய அவர் 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபர்ஹான், சயீம் அயூப் களம்கண்டனர்.

ஃபர்ஹான் 23, சயீம் அயூப் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் சல்மான் அலி அகா 14 ரன்களில் வெளியேறினார்.

முடிவுக்கு வந்த 14 வருட ஐபிஎல் பயணம்; பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடவுள்ள டு பிளெஸ்ஸிஸ்!

அடுத்து இறங்கிய பாபர் அசாம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். அவர் 34 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

summary

Pakistan bowlers were key as the hosts defeat Sri Lanka in the tri-series final by six wickets.

முழு கட்டுரையைப் படிக்க →