பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!
பாகிஸ்தானின் ஒருநாள் தொடர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் மாற்றம்...
பாகிஸ்தான் ஒருநாள் தொடர் (ஒடிஐ) கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து முஹம்மது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஒருநாள் தொடர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்படுவதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இருப்பினும், முன்னாள் கேப்டன் முஹம்மது ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து, வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் முஹம்மது ரிஸ்வானின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் மற்றும் தேர்வுக் குழு இடையிலான ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில், பாகிஸ்தான் அணிக்கு ஷாஹீன் ஷா அஃப்ரிடி கேப்டனாக தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
The Pakistan Cricket Board has ordered the removal of Muhammad Rizwan from the post of captain of the Pakistan One-Day International (ODI) cricket team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.