முகப்பு
கிரிக்கெட்

பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!

பாகிஸ்தானின் ஒருநாள் தொடர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் மாற்றம்...

Updated On : 20 அக்டோபர், 2025 at 11:15 PM
ஷாஹீன் ஷா அஃப்ரிடி (கோப்புப் படம்)
பகிர்:

பாகிஸ்தான் ஒருநாள் தொடர் (ஒடிஐ) கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து முஹம்மது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் ஒருநாள் தொடர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்படுவதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இருப்பினும், முன்னாள் கேப்டன் முஹம்மது ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து, வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் முஹம்மது ரிஸ்வானின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் மற்றும் தேர்வுக் குழு இடையிலான ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில், பாகிஸ்தான் அணிக்கு ஷாஹீன் ஷா அஃப்ரிடி கேப்டனாக தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

summary

The Pakistan Cricket Board has ordered the removal of Muhammad Rizwan from the post of captain of the Pakistan One-Day International (ODI) cricket team.

முழு கட்டுரையைப் படிக்க →