மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு 245 ரன்கள் இலக்கு...
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இந்தூரில், இன்று (அக். 22) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதிகப்படியாக, இங்கிலாந்து அணிக்காக வீராங்கனைகள் டாமி பியூமாண்ட் 78 ரன்கள், ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
முன்னதாக, உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியது முதல் ஒரு போட்டியில் கூட தோல்வியே சந்திக்காமல், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!
Australia has been set a target of 245 runs against England in the Women's ODI World Cup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.