யு19 உலகக் கோப்பை: இரட்டைச் சதத்தை தவறவிட்ட இங்கி. வீரர்! ஸ்காட்லாந்துக்கு 405 ரன்கள் இலக்கு!
யு19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி குறித்து...
யு 19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 404/6 ரன்கள் எடுத்துள்ளது.
குரூப் சி பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க நம.3 வீரராக பென் மாயேஸ். களமிறங்கினார்.
Advertisement
இவரும் தொடக்க ஜோசப் மூரிஸும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.
அதிகபட்சமாக பென் மாயேஸ் 191 ரன்களும் ஜோசப் மூரிஸ் 81 ரன்களும் எடுத்தார்கள்.
இறுதியில் 50 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தார்கள். குரூப் சி பிரிவில் ஏற்கெனவே இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றதால், ஸ்காட்லாந்து அணிக்கு இந்த வெற்றி முக்கியமானது.