ருதுராஜ் கெய்க்வாட்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ருதுராஜின் தலைமைப் பண்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.

DIN

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இயான் மோர்கன் (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 67 ரன்கள் எடுத்தது ருதுராஜ் கெய்க்வாட்டின் நம்பிக்கையை அதிகரிக்கும். ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே இது போன்ற இன்னிங்ஸ்களில் விளையாடுவது இனிவரும் போட்டிகளில் அவரது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். பந்துவீச்சாளர்களை ருதுராஜ் அருமையாக பயன்படுத்தினார் என்றார்.

நேற்றையப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 67 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT