FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

முதல் முறை போன்று தெரியவில்லை; ஷுப்மன் கில்லுக்கு சாய் கிஷோர் புகழாரம்!

ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

Updated On : 25 மார்ச் 2024, 6:35 pm IST
- படம் | AP
பகிர்:

ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், ஷுப்மன் கில் கேப்டன் பொறுப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவர் முதல் முறை கேப்டனாக செயல்படுவது போன்று தெரியவில்லை. போட்டியின்போது அவர் கொடுத்த அறிவுரைகள் மிகவும் சிறப்பானதாகவும், உதவிகரமானதாகவும் இருந்தது என்றார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மார்ச் 26) நடைபெறும் போட்டியில் குஜாரத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments