சதம் அடித்த மகிழ்ச்சியில் கொண்டாடிய ரிஷப் பந்த்.  படம்: ஏபி
ஐபிஎல்

ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறித்து...

DIN

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

18-ஆவது சீசனின் 70-ஆவது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த லக்னௌ 227/3 ரன்கள் சேர்க்க, ஆர்சிபி 18.4ஆவது ஓவரில் 230/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் லக்னௌ அணியினர் மெதுவாக பந்துவீசியதற்காக அணியினருக்கு தலா ரூ.12 லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் (எது குறைவானதோ அதன்படி) அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஐபிஎல் தொடரில் லக்னௌ அணி 3-ஆவது முறையாக மெதுவாக பந்துவீசியதால் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சதமடித்த ரிஷப் பந்த்திறகு இந்த அபராதம் தேவையில்லாத ஒன்றாகவே அமைகிறது.

இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வீரருக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குவாலிஃபயர் 1-க்கு முன்னேறியுள்ள ஆர்சிபி பஞ்சாபுடன் மே.29ஆம் தேதி மோதுகிறது.

குவாலிஃபயர் 2-இல் மும்பையும் குஜராத் அணியும் மே.30ஆம் தேதி மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

SCROLL FOR NEXT