முகப்பு
ஒலிம்பிக்ஸ்

இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்,வீராங்கனைகள் உறுதியோடு போராடியதாக அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம்.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 4:34 PM
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - படம் | ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இன்ஸ்டாகிராம்)
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 4:09 PM

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் உறுதியோடு போராடியதாக அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்,வீராங்கனைகள் உறுதியோடு போராடியதாக அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 4:25 PM

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணியின் ஒலிம்பிக் போட்டிக்கான ஜெர்சியை அணிந்திருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பெருமையான தருணமாக இருக்கும். நமது இந்திய வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக்கில் மிகுந்த அர்ப்பணிப்போடும், விடாமுயற்சியோடும் உறுதியாக போட்டியிட்டனர். வெற்றியோ, தோல்வியோ உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 4:25 PM

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.