முகப்பு
செய்திகள்

ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோஹர் ராஜிநாமா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியில் இருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.

Updated On : 15 மார்ச், 2017 at 12:58 PM
பகிர்:

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியில் இருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் கடந்த நவமபர் 2015 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். அவர் அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு   வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக பதவி வகித்து வந்தார். ஐசிசி தலைவர் பதவி ஏற்கும் முன்பாக தான் வகித்து வந்த பிசிசிஐ செயலாளர் பதவியை அவர் ராஜிநாமா செய்து விட்டார்.

இவர் தலைவராக இருந்த கால கட்டத்தில்தான் ஐசிசி வருவாயில் இருந்து  இந்தியாவுக்கு கிடைக்கும் வருடாந்திர வருமானத்தில் குறைப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Advertisement

இந்நிலையில் சஷாங் மனோகர் இன்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.சொந்த காரணங்களுக்காக அவர் ராஜிநாமா செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.