காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து அசத்தினார். பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்தது. 23 பந்துகளில் அரை சதம் எடுத்தார் மந்தனா. இந்திய மகளிர் டி20 கிரிகெட்டில் இது விரைவான அரை சதம். இதற்கு முன்பு 24 பந்துகளில் அரை சதம் எடுத்து சாதனை படைத்திருந்தார் மந்தனா. ஜெமிமா ரோட்ரிகஸ் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்
காமன்வெல்த் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் இரு இந்தியர்கள்
காமன்வெல்த் நடைப் பந்தயம்: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை
செஸ் ஒலிம்பியாட் அரங்கை மீண்டும் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
கிரிக்கெட்டிலும் பாரபட்சம் இருந்தது: ஹாக்கி வீராங்கனைகளுக்கு சேவாக் ஆறுதல்
தவறு செய்த நடுவர்: இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளர் அதிருப்தி
காமன்வெல்த் மல்யுத்தம்: ஒரே நாளில் மூன்று தங்கங்களைக் குவித்த இந்தியா