செய்திகள்

சென்னை செஸ் ஒலிம்பியாட் கடைசி சுற்று: டிரா செய்த வைஷாலி

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வீராங்கனை வைஷாலி...

DIN


சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வீராங்கனை வைஷாலி தன்னுடைய கடைசி ஆட்டத்தை டிரா செய்துள்ளார்.

இந்திய ஏ மகளிர் அணி தனது கடைசி சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி தனது கடைசி ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் கிருஷ் ஐரினாவை எதிர்கொண்டார். 44-வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்ய இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.

சென்னை செஸ் ஒலிம்பியாடில் விளையாடிய 11 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என நன்றாக விளையாடி இந்திய ஏ அணியின் முக்கிய வீராங்கனையாக உள்ளார் வைஷாலி.

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT