செய்திகள்

இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டன் நியமனம்

DIN

இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாகப் பிரபல வீரர் ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையை வென்ற இயன் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பேட்டரான ஜாஸ் பட்லர், இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக 9 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் அவர் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். கேப்டனாக அறிவிக்கப்பட்ட பட்லர், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனது புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மேத்யூ மாட் நியமிக்கப்பட்டார். எனவே இங்கிலாந்து அணி டெஸ்ட், வெள்ளைப் பந்து என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் புதிய கூட்டணியுடன் பயணிக்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT