செய்திகள்

‘ருதுராஜை ஏன் பேட்டிங்கு அனுப்பவில்லை?’- ஹார்திக் பாண்டியா சொல்லும் காரணம்

DIN

இந்தியா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். 

மழைக் காரணமாக போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அயர்லாந்து முதலில் பேட்டிங் விளையாடி 107 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9.2 ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக தீபக் ஹூடா களமிறங்கினார். இதைக்குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது: 

ருத்துக்கு பின்னங்காலின் சதைப் பகுதியில் சிறிய பிரச்சனை இருந்தது. அவரை இந்நிலையில் விளையாட வைப்பது சரியான முடிவாக தோன்றவில்லை. எங்களுக்கு பேட்டிங் தரவரிசை ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாருமே ஒரு இடத்தில்தான் விளையாடுகிறோம். அவரது காயத்துடன் விளையாட நாங்கள் விரும்பவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT