செய்திகள்

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது ஏன்?: ஆஸி. கேப்டன் விளக்கம்

ஆஸ்திரேலிய டெஸ்ட், ஒருநாள் அணிகளின் கேப்டனான பேட் கம்மின்ஸ், 2023 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய டெஸ்ட், ஒருநாள் அணிகளின் கேப்டனான பேட் கம்மின்ஸ், 2023 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 7.25 கோடிக்கு கம்மின்ஸைத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. எனினும் 5 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கம்மின்ஸ், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகினார். பணிச்சுமை காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார் கம்மின்ஸ்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தன்னுடைய முடிவு குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:

அடுத்த 12 மாதங்களில் ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதனால் தான் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறினேன். இன்னும் நாங்கள் 15 டெஸ்டுகள் விளையாட வேண்டும். டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைவோம் என நம்புகிறேன். ஏகப்பட்ட ஒருநாள் ஆட்டங்களும் உலகக் கோப்பைப் போட்டியும் இருக்கின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலும் நான் விளையாடினால் எனக்கேற்ற ஓய்வு கிடைக்காது. எனவே நேரம் கிடைக்கும்போது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். மனத்தளவில் நல்ல நிலைமையில் நான் இருக்க வேண்டும்.  கேப்டன் ஆனபிறகு இதில் கூடுதலாகக் கவனம் செலுத்தியுள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT