செய்திகள்

டி20: டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு, தடியடியில் காயமடைந்த ரசிகர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளை வாங்க வந்த...

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளை வாங்க வந்த ரசிகர்கள் சிலர், காவலர்களின் தடியடியில் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மொஹலியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வென்றது. வரும் ஞாயிறன்று ஹைதராபாத்தில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் ஜிம்கானா மைதானத்தில் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்க இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தார்கள். 3,000 டிக்கெட்டுகளை வாங்க 30,000 ரசிகர்கள் திரண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவலர்கள் தடியடி நடத்தியதில் சில ரசிகர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT