சையத் முஷ்டாக் அலி: தமிழக அணிக்கு முதல் வெற்றி!
2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழக அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழக அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
முதல் ஆட்டத்தில் சத்தீஸ்கரிடம் தோற்ற தமிழக அணி, 2-வது ஆட்டத்தில் ஒடிஷாவை எதிர்கொண்டது. லக்னெளவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஒடிஷா அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. சுப்ரான்ஷு 65 ரன்கள் எடுத்தார். நடராஜன் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.
தமிழக அணி, 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் பாபா அபரஜித் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.