முகப்பு
செய்திகள்

6 வீரர்கள் டக்கவுட்: மோசமான சாதனையில் இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

அடுத்து ஆடிய இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 46, ஷுப்மன் கில் 36, ரோஹித் 39 ரன்களும் எடுத்தனர். ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஷ் ஐயர், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்கவுட்டானார்கள். 

தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா, நெகிடி, பர்கர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

இதுவரை டெஸ்டில் 6 பேர் டக்கவுட்டான மோசமான நிகழ்வு 8 முறை நிகழ்ந்துள்ளது. 

முதல்நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 62/3 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவை விட 36 ரன்கள் பின் தங்கியுள்ளார்கள். 

முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →