படம் | டீம் இந்தியா (எக்ஸ்)
செய்திகள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி பிசிசிஐ நிதியுதவி!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

DIN

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் தொடங்கவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். வீரர், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள் என 140 பேரும் பாரிஸுக்குச் சென்றடைந்தனர். இந்தியா சார்பில் மொத்தமாக 257 பேர் கொண்ட குழு பாரிஸ் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடியை நிதியுதவியாக பிசிசிஐ அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி அளித்து பிசிசிஐ அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை இங்கு பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நாங்கள் ரூ. 8.5 கோடி வழங்குகிறோம். பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவுக்கு பெருமை சேருங்கள். ஜெய்ஹிந்த் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT