கடும் வெய்யிலில் நிறுத்தப்பட்ட ரயில்! உலகை உற்றுப்பார்க்க வைத்த பாரிஸ் சம்பவம்!
கடும் வெய்யிலில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்த பயணிகள் பரிதவித்துப் போன சம்பவம் பற்றி..
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வரும் நிலையில், பாரிஸ் - நைஸ் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில், திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உச்ச வெய்யிலில் குளிர்சாதன வசதி இல்லாமல், நான்கு மணி நேரம் பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் இருந்த நிலையில், கடும் வெப்பத்தால் ரயிலுக்குள் மூச்சு விட முடியாமல் அவதியடைந்த பயணிகள் ரயிலிலிருந்து இறங்கிவிட்டனர். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement