செய்திகள்

இங்கிலாந்து வீரரின் 100-வது போட்டியில் சுவாரசியம்!

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

DIN

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டி இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். பேர்ஸ்டோ தனது 100-வது ஒருநாள் போட்டியையும் தர்மசாலா மைதானத்திலேயே விளையாடினார். தற்போது அதே மைதானத்தில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

100-வது டெஸ்ட் போட்டி குறித்து பேர்ஸ்டோ பேசியதாவது: 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது பெருமையாக உள்ளது. இந்த வாரம் எனக்கு உணர்வுபூர்வமான வாரமாக இருக்கப் போகிறது. மைதானத்தை சீரமைக்கும் வேலையை பணியாளர்கள் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த மைதானத்தின் தன்மை நன்றாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. ஆடுகளத்தின் தன்மை இரு அணிகளுக்கும் சாதகமானதாக உள்ளது என்றார்.

34 வயதாகும் ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 17-வது இங்கிலாந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT