செய்திகள்

ஐபிஎல் மிகவும் பிரபலமானது, ஆனால்... 100-வது போட்டிக்கு முன்பு அஸ்வின் பேசியது என்ன?

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

DIN

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கியது. இந்தப் போட்டி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது போட்டிக்கான தொப்பியை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு வழங்கி கௌரவப்படுத்தினார். 100-வது போட்டியில் விளையாடும் அஸ்வினின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.

100-வது போட்டிக்கான தொப்பியை பெற்ற பிறகு அஸ்வின் பேசியதாவது: ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடராக இருந்து வருகிறது. அதிக அளவிலான சிறுவர்கள் டி20 போட்டிகளில் விளையாடி ஐபிஎல் போட்டிகளில் இடம்பிடிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதை நானும் விரும்புகிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கற்றுத் தர முடியாத பல விஷயங்களைக் கற்றுத் தரும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது வாழ்க்கை போன்றது என நினைக்கிறேன். அழுத்தமான சூழலுக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொண்டு அதனை திறம்பட கையாள டெஸ்ட் கிரிக்கெட் கற்றுத் தரும். இது எனக்கு மட்டுமில்லாது சென்னையில் இருக்கும் எனது அப்பாவுக்கும் மிகவும் உணர்வுபூர்வமான தருணம். அவரால் இன்று இங்கு வரமுடியவில்லை. என்னுடைய அம்மா மற்றும் தாத்தாவின் உதவியோடு என்னை இந்த இடத்துக்கு அவர் கொண்டுவந்துள்ளார். கடினமான காலங்களில் எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்து என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக எனது கிரிக்கெட் பயணத்தை எனது குழந்தைகளும் கொண்டாடி வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT