FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐபிஎல் 2024 உடன் ஓய்வை அறிவிக்கவுள்ள தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 மார்ச் 2024, 12:16 pm IST
தினேஷ் கார்த்திக் (கோப்புப் படம்)
பகிர்:

பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

38 வயதான தினேஷ் கார்த்திக் தமிழகத்தினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனியால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனதாக சில கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

242 ஐபிஎல் போட்டிகளில் 4516 ரன்கள் எடுத்துள்ளார். ஆர்சிபி அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். 94 ஒருநாள் போட்டிகளில் 2392 ரன்களும், 26 டெஸ்ட் பொட்டிகளில் 1025 ரன்களும் 60 டி20களில் 686 ரன்களும் எடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் தினேஷ் கார்த்திக் இந்தாண்டு ஐபிஎல்தான் அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்குமெனவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி டேர்டெவில்ஸில் தொடங்கிய தினேஷ் கார்த்தியின் பயணம் 2011இல் பஞ்சாப் அணியில் விளையாடினார். 2 ஆண்டுகள் மும்பையுடன் விளையாடி பின்னர் மீண்டும் தில்லி அணிக்கு 12.5 கோடிக்கு திரும்பினார். 2018இல் கேப்டனாக கொல்கத்தா அணியை ப்ளே ஆஃப்க்கு அழைத்து சென்றார். 2022இல் கேகேஆர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆர்சிபி அணிக்கு 5 கோடி விலைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் 6 அணிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்டராக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 141 கேட்ச்கள், 36 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ஆர்சிபி அணிக்காக ஃபினிஷர் ரோலில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், தற்போது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். சரவ்தேச கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் தினேஷ் கார்த்திக் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments