DOTCOM
DOTCOM
செய்திகள்

பெங்களூரு அணியைக் கிண்டலடித்த ராஜஸ்தான் அணி!

DIN

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 2-ஆவது சீசனில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் டெல்லி 18.3 ஓவா்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து பெங்களூா் 19.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சோ்த்து வென்றது.

கடந்த சீசனில் மும்பையிடம் இறுதி ஆட்டத்தில் தோற்ற டெல்லி அணி, இந்த முறையும் துரதிருஷ்டவசமாக 2-ஆம் இடமே பிடித்தது.

ஆடவருக்கான ஐபிஎல் போட்டியில் பெங்களூா் அணி கடந்த 17 சீசன்களாக வெற்றிக்கு போராடி வரும் நிலையில், அதன் மகளிா் அணி 2-ஆவது சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடவர் அணி பெங்களூரு அணியின் எக்ஸ் பக்கத்தை டேக் (tag) செய்து மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதில், ஆண் ஒருவர் கேஸ் சிலிண்டரைத் தூக்க சிரமப்படுகிறார். ஆனால், வீட்டில் உள்ள பெண் சுலபமாக அதைத் தூக்கிச் செல்கிறார். இந்தப் படத்தைப் பகிர்ந்து, “வாழ்த்துக்கள்” தெரிவித்துள்ளனர்.

அதவாது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணியால் சுலபமாக வாங்க முடிந்த சாம்பியன் கோப்பையை இன்றுவரை ஆண்கள் அணி வாங்கவில்லை என்பதைக் குறிப்பிடும் விதமாகக் கிண்டலடித்துள்ளனர்.

இதனைக் கண்ட ரசிகர்களில் சிலர் சிரித்தாலும், சிலர் பெங்களூரு ஆண்கள் அணியைக் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது என வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றுமொரு பாலியல் புகார்!

SCROLL FOR NEXT