முகப்பு
செய்திகள்

கால்பந்து போட்டியில் களமிறங்கிய மெஸ்ஸியின் மகன்..!

கடந்தமுறை கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியின் மகன் இன்டர்மியாமி அணியின் போட்டியில் விளையாடினார்.

Updated On : 26 நவம்பர் 2024, 4:34 pm IST
மெஸ்ஸியின் மகன் தியாகோ மெஸ்ஸி. - படங்கள்: எக்ஸ் / பிஆர் ஃபுட்பால்.
பகிர்:

கால்பந்து உலகில் மிகவும் புகழ்பெற்ற வீரர் லயோனல் மெஸ்ஸி. 8 முறை பேலன்தோர் விருது (தங்கப் பந்து) பெற்று அசத்தியுள்ளார்.

கடந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடிவருகிறார். அவரது சிறப்பான பங்களிப்பினால் இன்டர்மியாமி அணி முதல்முறையாக எம்எல்எஸ்-இன் சப்போர்டர்ஸ் ஷீல்டு கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

மெஸ்ஸியன் மகன் தியாகோ மெஸ்ஸி 12 வயதாகிறது. ஆர்ஜென்டீனாவில் நேவெல்ஸ் கோப்பைக்கான 13 வயதுக்குட்பட்டோருக்கான இன்டர்மியாமி அணியில் விளையாடுகிறார்.

வடக்கு, தென் அமெரிக்காவிலுள்ள 8 கிளப் அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டிகள் 5 நாள்கள் நடைபெறுகின்றன.

தந்தையின் ஜெர்ஸி எண் 10 உடன் மகன் தியாகோ மெஸ்ஸியும் களமிறங்குகிறார்.

மெஸ்ஸி ரோசாரியோவில் பிறந்தவர். நேவெல்ஸ் ஓல்டுபாய் சார்பாக 5 வருடம் விளையாடிய மெஸ்ஸி பின்னர் 13 வயதில் பார்சிலோனா அணியில் சேர்ந்தார்.

37 வயதாகும் மெஸ்ஸி அதிகமான போட்டிகள் பார்சிலோனாவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்டர்மியாமியில் விளையாடுகிறார்.

இந்தப் போட்டியை தியோகோ மெஸ்ஸியின் அம்மா, அவரது தந்தை, தாத்தா பாட்டியுடன் பார்வையிட்டார்கள். இதில் நேவேல்ஸ் அணி 1-0 என இன்டர்மியாமியை வீழ்த்தியது.

இவர்களுடன் இன்டர் மியாமி ஸ்டிரைக்கர் லூயிஸ் சௌரேஜ் மகன் பெஞ்சமின் சய்ரேஜ் தியாகோ மெஸ்ஸியுடன் விளையாடினார். அடுத்தபோட்டி உருகுவே கிளப் அணியுடன் இன்று நடைபெறுகிறது.

இதுவரை, தியாகோ மெஸ்ஸி 12 வயதுக்குட்பட்டோருக்கான 6 போட்டிகளில் 13 கோல்கள், 7 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments