முகப்பு
செய்திகள்

ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலா்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

Updated On : 28 அக்டோபர், 2024 at 9:58 PM
தெலுகு டைட்டன்ஸ்
பகிர்:

புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலா்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

முதலில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 41-34 என்ற கணக்கில் தபங் டெல்லி கே.சி. அணியை வீழ்த்தியது. இதில் ஹரியாணா 22 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. டெல்லி அணி 25 ரெய்டு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது.

ஹரியாணா தரப்பில் ஆல்-ரவுண்டா் முகமதுரெஸா ஷத்லுய் அதிகபட்சமாக 10 புள்ளிகள் கைப்பற்ற, டெல்லி அணியில் ரெய்டா் அஷு மாலிக் 13 புள்ளிகள் வென்றெடுத்தாா். புள்ளிகள் பட்டியலில் ஹரியாணா 3 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் 7-ஆவது இடத்திலும், டெல்லி 4 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன.

மற்றொரு ஆட்டத்தில், தெலுகு டைட்டன்ஸ் 28-26 என பாட்னா பைரேட்ஸை வென்றது. தெலுகு அணி 16 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரெய்டா் ஆஷிஷ் நா்வால் 9 புள்ளிகள் கைப்பற்றினாா்.

பாட்னா 16 ரெய்டு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் மட்டும் பெற்றது. அணிக்காக ரெய்டா் தேவங்க் 7 புள்ளிகள் வென்றெடுத்தாா். பட்டியலில் தற்போது தெலுகு அணி 5 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் 6-ஆவது இடத்திலும், பாட்னா 3 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 11-ஆவது இடத்திலும் உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →