முகப்பு
செய்திகள்

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனை வாங்கியது சிஎஸ்கே!

ஐபிஎல் 2026ஆம் ஆண்டுக்கான சீசனுக்குத் தயாராகும் வகையில், சஞ்சு சாம்சனை வாங்கியது சிஎஸ்கே அணி

Updated On : 15 நவம்பர் 2025, 10:25 am IST
சஞ்சு சாம்சன்
பகிர்:

மும்பை: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான அணிகளில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை பிளேயர் ஸ்வாபிங் டிரேடிங் மூலம் அணியில் இணைத்துள்ளது.

ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான அணி வீரர்களின் மாற்றங்கள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு இறுதி செய்து வெளியிட வேண்டும் என்பதால், வீரர்களை வாங்குவதிலும் மற்ற அணிக்கு வழங்குவதிலும் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சில முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது. அதாவது, சிஎஸ்கே அணிக்குள் சஞ்சு சாம்சனை கொண்டுவந்துள்ளது.

Advertisement

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைந்ததாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேவேளையில், நியூசிலாந்து இணையர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு கான்வே, ரூ.6.25 கோடிக்கும், ரச்சின் ரூ.4 கோடிக்கும் சிஎஸ்கே அணி வாங்கியிருந்த நிலையில், இருவரும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தாததால், விடுவிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியில் இருந்த நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடிக்கு தில்லி அணி வாங்கி இருக்கிறது.

இன்னும் சில மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

summary

CSK acquires Sanju Samson to prepare for IPL 2026 season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments