தமிழ்நாடு

பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்கிறார்கள்: ஓபிஎஸ் அணி மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்!

DIN

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்று ஓபிஎஸ் அணி மீது அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் வைத்திலிங்கம் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வரும் வேளையில்  அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் வைத்திலிங்கம், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தனக்கு பிறகும் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் நிலைத்து வாழ வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். அதற்காகவே தற்பொழுது நிலவி வரும் சிக்கலை தீர்த்து கட்சியையும் சின்னத்தையும் அடைய முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அதற்காகத்தான் பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காணலாம்.   

ஆனால் தற்பொழுது அந்த அணியின் கே.பி.முனுசாமி பேசியுள்ளது இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அமைந்துள்ளது. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை கேட்கிறார்கள். அதைபன்னீர்செல்வம் முதல்வராக இருந்த பொழுது அவரே செய்திருக்க முடியுமே?

இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT