முகப்பு
தமிழ்நாடு

பொறுப்பு ஆளுநரால் நடக்கும் அரசியல் சித்து விளையாட்டு: பொருமும் திவாகரன்!

தமிழகத்திற்கு என தனியாக ஆளுநர் இல்லாமல், பொறுப்பு ஆளுநரால் நிர்வகிக்கப்படுவதாலேயே இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கிறது என்று அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

மன்னார்குடி: தமிழகத்திற்கு என தனியாக ஆளுநர் இல்லாமல், பொறுப்பு ஆளுநரால் நிர்வகிக்கப்படுவதாலேயே இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கிறது என்று அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

இந்த அரசை காப்பாற்ற வேண்டுமானால் சபாநாயகர் தனபாலை முதல்வராக நியமிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் இல்லாத ஒரு அரசாங்கம் அமைவதுதான் இப்போது நல்லது  

நேற்று அமைச்சரவையிடம் முழுமையாக ஆலோசித்து ஒரு முடிவு எடுத்திருந்தால் இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது.  

தமிழகத்திற்கு என தனியாக ஆளுநர் இல்லாமல், பொறுப்பு ஆளுநரால் நிர்வகிக்கப்படுவதாலேயே இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் டிடிவி தினகரனுக்கு மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →