ஜெயலலிதா எழுதிய நாவல் 'ஒருத்திக்கே சொந்தம்' மறுபதிப்பு
தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா எழுதிய 'ஒருத்திக்கே சொந்தம்' என்கிற முதல் நாவலை ஜனவரி மாதத்தின் 'குடும்ப நாவல்' இதழில் மறுபதிப்பு செய்துள்ளார்கள்.
சென்னை: தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா எழுதிய 'ஒருத்திக்கே சொந்தம்' என்கிற முதல் நாவலை ஜனவரி மாதத்தின் 'குடும்ப நாவல்' இதழில் மறுபதிப்பு செய்துள்ளார்கள்.
திரைப்பட நடிகையாக, பாடகியாக, அரசியல்வாதியாக இருந்த ஜெயலலிதாவுக்கு நாவல் ஆசிரியர், எழுத்தாளர் என்ற முகங்களும் உண்டு.
ஜெயலலிதாவின் முதல் நாவல் 'ஒருத்திக்கே சொந்தம்' 1980ம் ஆண்டு வெளியானது. இந்த நாவலை மாலைமதி பதிப்பகம் வெளியிட்டது. நாவல் எழுத வேண்டும் என்ற கனவை நனவாக்கியவர், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், மறைந்த துக்ளக் ஆசிரியருமான சோ.
ஒரு நாயகனுக்கும், 2 நாயகிகளுக்கும் இடையிலான பாசக் கதைதான் 95 பக்கம் கொண்ட 'ஒருத்திக்கே சொந்தம்' நாவலின் கரு.
இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் குடும்ப நாவல் இதழில் இது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.